Saturday, October 1, 2011

இந்த உலக வாழ்க்கை எதற்காக? பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது? எது சிறப்பான வாழ்க்கை முறை? என்று யுகயுகமாய் இந்த மானுடம் முன்பு இருக்கும் கேள்விகளுக்கு விடையாக வருவது நம்மிடையே வாழ்ந்து மறைந்த மகான்களின் வாழ்க்கையும் அவர்களின் கூற்றுகளுமே ஆகும். இதில் எல்லா மதத்தை சேர்ந்த மகான்களும் அறிவுறுத்துவது மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே சிறப்பானது மற்றும் அர்த்தமுள்ளது என்பதே. தனிநபர் தேவை, வாழ்க்கையில் உயர்வு என்பவைகளை கடந்து பல்வேறு காரணங்களினால் வாழ்வில் பின் தேங்கி உள்ள சக மனிதர்களுக்காக சிறிதளவு நேரம், முடிந்தளவு பொருளுதவி என்பவைகளையும் தாண்டி தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்காக, பல்வேறு துறைகளில் செயல்பட்டுவரும் இளைஞர்களை வாழ்த்தி அவர்களின் சமுதாயப் பணிகளுக்கும், இலட்சியங்களுக்கும் என்றென்றும் நம்மால் முடிந்த சிறப்பான உதவிகளை வாழ்வின் பல்வேறு கடமைகளுக்கு செவ்வனே செய்வது போல செய்வோமாக என்று உலக மாந்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எந்த விளம்பரமும் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி சமுதாயப் பணிச் செய்பவர்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டுவதற்கே
இந்த வலைப்பூ பூத்துள்ளது.

நன்றி

ஜே. பிரபாகர் (ஜே.பி)
தொடர்புக்கு: 9600199110


No comments:

Post a Comment